Friday 31 July 2009

13. கதர் ஆடை இயக்கம்

பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அல்லது செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வகித்துக்கொண்டிருக்கும் பதவி இவற்றை நாட்டின் நலனுக்காக விட்டுக்கொடுக்க நம்மில் எத்தனை பேருக்கு மனம் இருக்கும். ஈ.வெ.ராமசாமிக்கு அந்த மனம் இருந்தது. நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது தாம் வகித்த இருபத்தியென்பது பதவிகளையும் தூக்கி எறிந்தார் அவர். கதர் ஆடை அணிதல், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகிய மூன்றும் காந்தியடிகளின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தது. அதனை அப்படியே உள் வாங்கிக்கொண்ட ஈ.வெ.ரா அதன் வழியில் மாறினார்.

தீண்டாமை கூடாது என்று பேசியும், கடைபிடித்தும் வந்தவர் தான் ஈ.வெ.ராமசாமி. அதனோடு இப்போது கதராடையும், மதுவிலக்கு பிரச்சாரங்களும் சேர்ந்துகொண்டன. சாரட் வண்டி, பட்டு, பாலீஸ்டர் ஆடைகள், செல்வந்தருக்கான அலங்காரங்கள் எல்லாவற்றையும் துறந்தார். கஞ்சி போட்ட கதர் ஆடைக்கு மாறினார். மாற்றத்தை தன் குடும்பத்தில் இருந்தே தொடங்கினார். ராசமாமியின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணமாவும் கதராடைகளுக்கு மாறினார்கள். என்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த தாயார் சின்னத்தாயம்மையாரையும் கதராடை பக்கம் இழுந்துவந்தார் ராமசாமி. பின்னர் உறவினர்கள், நண்பர்கள் என தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் கதராடைக்கு மாற்றினார். அதன் பின் கதராடை தயாரிப்புக்கான நூற்புராட்டினம் தக்ளியும் அறிமுகம் செய்து வைத்து நூல் நூற்கத்தொடங்கினார்.

தொடர்ந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டதால்.. மண்டிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மண்டியை மூடினார். வெளியில் இருந்து வரவேண்டிய லட்சக்கணக்கான பணம் வராமல் போனது. இவ்வளவு பெருந்தொகையை இழக்க நேர்ந்த போதும் ஈ.வெ.ரா கலங்கவில்லை. சேலத்தில் பிரபலமாக இருந்த வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார் என்ற காங்கிரஸ்காரர் கடன் பத்திரங்களைக் கொடுங்கள்.. கோர்ட் மூலம் வசூலித்து விடலாம் என்று சொன்னார். தமது கொள்கைக்கு முரணாக விசயம் நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கைக்கு முரணாக போகமாட்டேன் என்று பிடிவாதமாக அந்த இழப்புக்களை தாங்கிக்கொண்டார் ராமசாமி. இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்த விஜயராகவாச்சாரி பல சந்தர்ப்பங்களில் இந்த சம்பவம் குறித்தும் பலரிடம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அரண்மனை போன்ற விட்டை விட்டு வெளியேறி கதராடை பிரச்சாரத்திற்கு நண்பர்கள் சகிதம் செல்லத்தொடங்கினார். முதலில் ஈரோட்டிலும், பின்ன்னர் அதனி சுற்றிய கிராமப்பகுதிகளுக்கும் செல்லத்தொடங்கினார். கொடை வள்ளல் வெங்கட்டரின் மகன், பிரபலமான வியாபாரி.. எல்லாவற்ரையும் துறந்து இவ்வளவு எளிமையாக கதராடை பிரச்சாரத்தில் ஈடு படுகின்றாரே.. நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது.. என்று யோசித்த ஏழை, எளிய மக்களும், மற்ற செல்வந்தர்களும் கதராடைக்கு மாறத்தொடங்கினார்கள். ஆடை மாற்றம் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடியவரல்ல ராமசாமி. அதனால்.. அப்படி மாறியவர்களையும் பிரச்சாரம் செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரம் எளிமையாகப் பரவத்தொடங்கியது. தமிழகம் முழுக்க கிராமம் கிராமமாக தோளில் தூக்கியபடி கதராடைகளை விற்கப்போனார். அன்னிய ஆடைகளை கொழுத்திப் போட தயாராக இருக்கும் எளிய மக்களுக்கு தம் செலவிலேயே கதராடைகளை வழங்கவும் செய்தார். அனேகமாக தமிழகத்த்தில் ஈ.வெ.ராமசாமியின் கால் படாத பகுதியே இருக்க முடியாது என்ற அளவில் கதராடை பிரச்சாரத்தை நடத்தினார். மாநிலம் முழுவதும் கதராடை பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் கதர்த்துணி அங்காடிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணி அதை செயல் வடிவமும் கொடுத்தார் ராமசாமி. பல பகுதிகளில் அங்காடிகள் திறக்கப்பட்டன. பின்னாலில் பிரபல எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆடிரியராகவும் வளர்ந்த கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி திருச்செங்கோடு கதர் அங்காடியில் முதலில் பெரியாரால் பணிக்கு அமர்த்தப்பட்டார். காங்கிரஸ்காரர்கள் முதலில் கதராடைக்கு அவர் தம் குழும்பத்தினருடன் மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார் ராமசாமி. காங்கிரஸ் அதனை ஏற்றது. எல்லோரும் கதர் ஆடைக்கு மாறினார்கள். காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்கள் கூட கதராடைக்கு மாறினார்கள். தமிழகத்தில் கதராடை புரட்சி நடந்தது என்று கூட சொல்லலாம். மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் இது வேகமாக பரவ முக்கிய காரணமாக இருந்தது ஈ.வெ.ராமசாமியின் உழைப்பும், பேச்சும் என்றால் அது மறுக்க முடியாது.

இங்கே இரு செய்தியை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மதுஒழிப்பு பிரச்சாரத்தில் கள் உண்ணாமையும் ஒரு அங்கமாக இருந்தது. காந்தியடிகள் அப்படி சொன்னதும்... தன் தோட்டத்தில் இருந்த அய்நூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்தார் ஈ.வெ.ராமசாமி. அந்த காலகட்டத்தில் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குமதி வெகு விமர்சையாக நடந்து வந்தது. அதனால்.. நிறைய பலனை எதும் செய்யாமல் தந்துகொண்டிருக்கின்ற தென்னை மரங்களை பலரின் எதிர்ப்புக்களையும் மீறி வெட்டிச் சாய்த்தார்.

மது ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக கள் உண்ணாமை போராட்டத்தை அறிவித்தார் காந்தியடிகள். இதனை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட காந்தி தேர்வு செய்த ஊர் ஈரோட்டு. காந்தியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்திறங்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ஈ.வெ.ராமசாமியும் கலந்து பேசி கள்ளுக்கடைக்கு முன் மறியல் நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.

ஈ.வெ.ராமசாமி மதுகொள்கையில் காட்டி வந்த ஆதரவு தான் காந்தியையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் ஈரோட்டுப் பக்கம் வந்து போராட்டத்திற்கு நாள் குறிக்க காரணமாக இருந்தது. மேலும் ஆங்கில அரசுக்கு அடிபணிந்து போய்க்கொண்டிருந்த நீதிக்கட்சியின் வளர்ச்சியை முடியடிக்க, காங்கிரஸ்காரர்களின் மறைமுக தூண்டுதலால் திவான் பகதூர் கேசவப்பிள்ளை போன்றவர்களினால துவங்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாட்டை ஈரோட்டில் வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் ஈ.வெ.ராமசாமி. ராமசாமி ஒரு காரியத்தை தொட்டு விட்டால் வெற்றியைப் பார்க்காமல் ஓயமாட்டார் என்பதை அறிந்திருந்ததால்.. கள்ளுக்கடை முன் மறியல் போராட்டத்தை ஈரோட்டிலேயே துவங்க வேண்டும் என்றும் காங்கிஸ்காரர்கள் ஆசைப் பட்டார்கள்.

---------------------
(தொடரும்) *Download As PDF*

No comments: