Wednesday 5 August 2009

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

*Download As PDF*

2 comments:

தமிழ் ஓவியா said...

"பயனுள்ள சுட்டிகள்" பகுதியில் எனது வலைப் பூவான "தமிழ் ஓவியா" வை தங்கள் தளத்தில் இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஒருவேண்டுகோள்.

பயனுள்ள சுட்டிகள் பகுதியில்


"பெரியார் திராவிட கழகம்

திராவிட கழகத்தின்- பெரியார்"

என்பதில்

திராவிடர் என்ற சொல்லில் "ர்" நீக்கி எழுதியுள்ளீர்கள்.

திராவிடர் கழகம் என்பதுதான் சரியானது.பொருள்பொதிந்தது.

என்வே இந்தத் திருத்தத்தை திருத்தி அமைக்க வேண்டுகிறேன்.

மிக்க நன்றி தோழர்.

தமிழ் ஓவியா said...

திருத்தம் செய்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் தொண்டறப் பணி.